அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – எடப்பாடி ஆலோசனை

சென்னை, மார்ச். 9 –
இடைக்காலபொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் துவங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் வளர்ச்சிப்பணிகள், இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிமுக – பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக செயல்பட்டது. தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை என இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.