Home Front Page News அமலாக்கத்துறை அலுவலகத்தில்முன்னாள் எம்.பி.டி.கே சுரேஷ் ஆஜர்

அமலாக்கத்துறை அலுவலகத்தில்முன்னாள் எம்.பி.டி.கே சுரேஷ் ஆஜர்

பெங்களூரு: ஜூன் 23 –
பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா கவுடா, வராஹி வேர்ல்ட் ஆஃப் கோல்ட் நிறுவனத்தின் உரிமையாளர் வனிதா இத்தால் உட்பட பலரிடம் ரூ.9.82 லட்சம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையின் படி, ஐஸ்வர்யா தன்னை சுரேஷின் சகோதரி என்று தவறாக சித்தரித்து, பணம் செலுத்தாமல் கடனாக பல கிலோகிராம் தங்கத்தைப் பெற்றதாக புகார்தாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களை கவர்ந்திழுக்க பல்வேறு உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் நெருக்கம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
சுரேஷ் பெங்களூரு காவல்துறையிலும் தனது பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் புகார் அளித்திருந்தார். இதற்கிடையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழிமுறைகளைக் காரணம் காட்டி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐஸ்வர்யா கவுடா மற்றும் பலர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, ஏப்ரல் மாதம் ஐஸ்வர்யா கவுடாவை கைது செய்தது.
ஐஸ்வர்யா கவுடா தங்க வியாபாரி ஒருவருக்கு ரூ.9.82 கோடி கொடுத்துள்ளார். இந்த வழக்கில் கர்நாடக துணை முதல்வரின் சகோதரரும் முன்னாள் எம்பியோமான டி கே சுரேஷ் இன்று பெங்களூரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் இந்த நாள பரபரப்பு
ஏற்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது
அமலாக்கத்துறை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுரேஷ் விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரானார்.
முன்னாள் எம்.பி. டி.கே. சுரேஷ் பலத்த பாதுகாப்புடன் தனது வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ், காலை 11 மணியளவில் சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார் அப்போது வெளியே அவரது ஆதரவாளர்கள் புகுந்தனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது

Exit mobile version