
மும்பை, ஆக.28-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுக்க எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது, இது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாட்னா, பெங்களூரு கூட்டங்களுக்கு பிறகு மும்பையில் இந்தியக் கூட்டணிக் கூட்டம் நடைபெறுகிறது இதில் மேலும் பல அரசியல் கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பின்பற்ற வேண்டிய உத்திகள் உட்பட பல முக்கிய முடிவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்திய கூட்டணியின் தலைவராக சோனியா காந்தியும், நடுவராக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. தவிர, தேர்தலை எதிர்கொள்ள கடைபிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழு அமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.