
சென்னை, ஆகஸ்ட். 22 – டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் நியமனம் தொடர்பான ஆவணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்து கோப்புகளை அனுப்பியது.
நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா என அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களையும் கவர்னர் கேட்டுள்ளார்.