இலவச திட்டங்களால் கர்நாடகம் திவால் ஆகிவிடும் – குமாரசாமி

The Chief Minister of Karnataka, Shri H.D. Kumaraswamy meeting the Union Minister for Consumer Affairs, Food and Public Distribution, Shri Ram Vilas Paswan, in New Delhi on October 06, 2018.

பெங்களூரு, நவ. 15: காங்கிரஸ் அரசின் இலவச திட்டங்களால் மாநிலம் திவாலாகிவிடும் என்று முன்னாள் முதல்வரும் மஜத சட்டமன்றக் கட்சித் தலைவர் எச்.டி. குமாரசாமி விமர்சித்துள்ளார்.
மேலும் உத்தரவாதத் திட்டத்தை முறையாகச் செலுத்தத் தவறிவிட்டீர்கள். இது குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு தயார் என சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ மூலம் சவால் விடுத்துள்ளார். கடன், பொருளாதாரம், நிதி ஸ்திரமின்மை-திறமையின்மை, ‘சொகுசு வாழ்க்கை’, கமிஷன் இவைதான் அரசு அளித்துள்ள‌ 5 புதிய உத்தரவாதங்கள் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சித்தராமையா, நீங்கள் ஏழைகளைப் பற்றி பேசுகிறீர்கள். எளிமையானவர் போல் காட்டிக் கொள்ளும் நீங்கள் உண்மையிலேயே சொகுசு வாழ்க்கை வாழ்கிறீர்கள். நான் சொன்னதை ஏன் திரிக்கிறீர்கள். நீங்கள் அளித்துள்ள 5 உத்தரவாத திட்ட‌ங்களைப் பற்றி நான் வருத்தப்படுகிறேன். இது குறித்து நான் சொன்னதை நீங்கள் திசை திருப்புகிறீர்கள். இதைப் பற்றி பகிரங்க விவாதத்திற்கு வருகிறேன். எங்கு வர வேண்டும் என்று அதில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் திட்டங்களை லட்சக்கணக்கான பயனாளிகள் கொண்டாடுகிறார்களா. உண்மையை சொல்லுங்கள் ஊடகங்கள் கூறுவது பொய்யா. ஊடகங்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பொய் சொல்வதுதான் வேலை என்று நினைக்கிறீர்களா. கடந்த காலத்தில் நீங்கள் செய்தது இதுதானா. உங்கள் ‘சோசலிச மனசாட்சி’ அப்படிச் சொல்கிறதா. காங்கிரஸ் வாக்காளர்களுக்கு மட்டும்தான் உத்தரவாதம் என்று சொன்னீர்களா. ஒருவேளை உங்களுக்கு அத்தகைய மனநிலை இருக்கலாம். உத்தரவாதங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தேன். அப்படியானால், ஊடகங்களுக்கு உண்மையைச் சொல்வது குற்றமா என்றார்.
மாநிலத்தில் விவசாயிகள் நரகத்தில் உள்ளனர். நீங்கள் வசூலை ஒதுக்கி வைத்துவிட்டு, விவசாயிகளுக்காக நிற்கவும். விவசாயிகளின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுங்கள். என்று நீங்கள் கூறவில்லை. நான் என் வீட்டுப்பாடத்தை செய்து காட்டினேன். தயவு செய்து அமைதி, வெறுப்பு, அவநம்பிக்கை பற்றி பேசாதீர்கள். என்னை விட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உங்கள் நற்பண்புகள் அதிகம் தெரியும். தேர்தல் தோல்வி என்பது எனக்கும், உங்களுக்கும் புதிதல்ல. உங்கள் விரக்தியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தோல்விகளைப் பற்றி சிந்தித்து பரிதாபப்படும் பழைய முறையை விட்டுவிடுங்கள்.
என் பெயரை கேட்டாலே பிரதமர் நரேந்திர மோடிக்கு பயம் வரும். பிரதமரைப் பற்றி முதல்வர் சொல்வது இதுதான். யாரைப் பற்றி பேசும் போதும் மரியாதை தேவை. ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்த உங்களுக்கு பொது அறிவு கூட இல்லையா. காவேரி விவகாரத்தில் உங்கள் தைரியமும் பலமும் என்ன என்று தெரிகிறது. தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் தொடர்ந்து செல்வதன் மூலம் இதனை புரிந்து கொள்ளலாம்.
இலவச திட்டங்களால் கர்நாடகத்தை நிதி ஆபத்தில் தள்ளி உள்ளீர்கள். வருவாய் பற்றாக்குறையால், ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவ‌து கடினம். நிலமை இப்படியே சென்றால் மாநிலம் திவாலாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.