
பெங்களூரு, ஆகஸ்ட். 26 -நிலவின் தென் துருவபகுதியைஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3விண்கலம் கடந ்த ஜூலை 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதன்லேண்டர் நிலவில் கடந ்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில்தரையிறங்கியது. பின்னர், அதில்இருந்து ரோவ ர் வெளியேவந்துஆய்வு பணிகளை தொடங்கிஉள்ளது.லேண்டரில் உள்ள அனைத்துஆய்வு கருவிகளும் செயல்பட
தொடங்கியுள்ளன. தொட ர்ந்து,அறிவியல் ஆய்வு பணிகளும்தொடங்கி உள்ளன எனஇஸ்ரோ அறிவித்தது.சந்திரயான்-3 விண்கலம்நிலவில் தரையிறங்கும்போது,தென்ஆப்பிரிக்காவில் பிரதமர்மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில இருந்த நிலையில்,இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குபாராட்டுகளை தெரிவித்துகொண்டதுடன், அதன் தலைவர்சோம்நாத் உடன் தொலைபேசி
வழியே பேசி வாழ்த்தும்தெரிவித்து கொண்டார்.இந்த நிலையில், சந்திரயான் 3விண்கல வெற்றியை தொடர்ந்து,இஸ்ரோ விஞ்ஞானிகளைசந்திப்பதற்காக பிரதமர் மோடிஇன்று காலை பெங்களூருவுக்குவருகை தந்துள்ளார். அவர்,காலை 7 மணிக்கு இஸ்ரோதரைக்கட்டுப்பாட்டு மையத்தில்இஸ்ரோ விஞ்ஞானிகளைசந்தித்து பேசிகிறார் எனதெரிவிக்கப்பட்டது.அவருடைய வருகையைமுன்னிட்டு பெங்களூருவிமான நிலையத்தில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.அவரை காண கட்சியினர்,மக்கள் கூடியிருந்தனர்.அவருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.பிரதமர் மோடி கூடியிருந்தமக்கள் முன் பேசும்போது,உங்களையும், வெற்றி பெற்றவிஞ்ஞானிகளையும் பார்ப்பதற்கு,என்னை கட்டுப்படுத்தமுடியவில்லை.
விண்கல வெற்றியின்போது,நான் வெளிநாட்டு பயணத்தில்இருந்தேன். அதனால் என்னால்,விஞ்ஞானிகளை உடனடியாக
சந்திக்க முடியவில்லை.அதனால்தான் நாடு திரும்பியஉடனே, பெங்களூருவுக்குவருகை தந்திருக்கிறேன்.விஞ்ஞானிகளை சந்திக்கவருகிறேன் என்பதனால்,முதல்-மந்திரி மற்றும்துணை முதல்-மந்திரியைவரவேண்டாம் என கூறினேன்.
நான் பெங்களூருவுக்குவரும்போது, முறைப்படி அரசுநடைமுறைகளை பின்பற்றினால்போதும் என கூறினேன் என்றுபேசியுள்ளார். இதன்பின்,பெங்களூருவில் இருந்துஇஸ்ரோ விஞ்ஞானிகளைசந்திக்க புறப்பட்டபோது,திரண்டிருந்த மக்களை நோக்கிகாரில் நின்றபடியே பிரதமர்மோடி கையசைத்து மகிழ்ச்சியைவெளிப்படுத்தினார். தொடர்ந்து,இஸ்ரோ சென்ற அவரை
தலைவர் சோம்நாத் மற்றும் பிறவிஞ்ஞானிகள் நேரில் பூங்கொத்துகொடுத்து வரவேற்றனர்.அவர்களை பிரதமர் மோடிபாராட்டினார். இஸ்ரோவிஞ்ஞானிகளை சந்திக்கும்அவர், இஸ்ரோ மையத்திலேயேஒரு மணிநேரம் இருக்கிறார்.அந்த ஒரு மணி நேரமும்இஸ்ரோ விஞ்ஞானிகளுடன்பிரதமர் மோடி ஆலோசனைநடத்த உள்ளார் என முன்பேதெரிவிக்கப்பட்டு இருந்தது.இதன்படி, விண்கலம்செயல்பாட்டு பணிகளை பற்றிபிரதமர் மோடிக்கு இஸ்ரோதலைவர் சோம்நாத் விளக்கி
கூறினார.