உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: அக். 4-
கரூர் கூட்ட நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் தவெக தலை​வர் விஜய் மீது வழக்கு பதிவு செய்​யாதது ஏன் என்று அரசுத் தரப்​புக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பியது.
உயி​ரிழப்பு நேரிட்ட நிலை​யில், கட்​சித் தொண்​டர்​களை பொறுப்​பற்ற முறை​யில் கைவிட்​டு​விட்டு விஜய் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் ஓடி​யுள்​ள​தாக நீதிபதி கடும் கண்​டனம் தெரி​வித்​தார்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர்.
100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இதை தொடர்ந்​து, அரசி​யல் கட்​சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வில்​லி​வாக்​கத்தை சேர்ந்த பி.ஹெச்​.​தினேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.
நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, நடந்த வாதம்: தமிழக அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன்: வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்​கும் வரை, ‘ரோடு ஷோ’ செல்ல எந்த கட்​சிக்​கும் அனு​மதி வழங்​கப்​ப​டாது என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
காவல் துறை தரப்​பில் ஆஜரான தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்​னா: கரூர் சம்​பவம் தொடர்​பாக பல்​வேறு பிரிவு​களின்​கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, தவெக கரூர் மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன்,
நகரச் செய​லா​ளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அவர்​கள் இரு​வரும் முன்​ஜாமீன் கோரி​யுள்​ளனர். புலன் விசா​ரணை நடந்து வரு​கிறது.
நீதிபதி செந்​தில்​கு​மார்: கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இதுதொடர்​பான காணொளி​கள் வேதனை அளிக்​கின்​றன. இந்த வழக்​கில் 2 பேர் மட்​டும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது? அனைத்​தை​யும் தமிழக அரசு அனு​ம​தித்​திருப்​பது அதிருப்தி அளிக்​கிறது.
விஜய் பயணம் செய்த பேருந்து மோதி விபத்து ஏற்​பட்​ட​தாக காணொளி​கள் வெளி​யாகி​யுள்​ளன. அந்த விபத்து தொடர்​பாக வழக்கு பதிவு செய்​யப்​பட்​ட​தா? வழக்கு பதிவு செய்​வதற்கு என்ன தடை? நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​களுக்கு கருணை காட்​டு​கிறீர்​களோ? பேருந்து மோதி​யது தொடர்​பாக வழக்கு பதிவு செய்​யா​விட்​டால் காவல்​துறை மீது மக்​களுக்கு எப்​படி நம்​பிக்கை இருக்​கும். வழக்கு பதிவு செய்​து, விஜய்​யின் பிரச்​சார வாக​னத்தை பறி​முதல் செய்​திருக்க வேண்​டா​மா. இந்த விஷ​யத்​தில் நீதி​மன்​றம் கண்​மூடி வேடிக்கை பார்த்​துக் கொண்டு இருக்​காது.அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்: பிரச்​சா​ரத்​துக்​காக தவெக கேட்ட இடத்​தை​தான் ஒதுக்​கினோம். 11 நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன. அதில் இரு நிபந்​தனை​கள் மட்​டுமே பூர்த்தி செய்​யப்​பட்​டன. மற்ற அனைத்து நிபந்​தனை​களும் மீறப்​பட்​டன. அதே இடத்​தில்​தான் எதிர்க்​கட்சி தலை​வர் பழனி​சாமி பிரச்​சா​ரம் செய்​துள்​ளார். தவெக நிகழ்ச்​சி​யின் பாது​காப்பு பணி​யில் 559 போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டனர். அரசு மீது குறை கூறு​வது எளிது. இவ்​வாறு வாதம் நடந்​தது.