சென்னை: செப்.1-
அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்தில் மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறி பழனிசாமி நம் முதுகில் குத்திவிட்டார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிர்வாகிகள் மத்தியில் கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னையில் தேமுதிக தென்சென்னை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதாவது:செப்டம்பர் மாத இறுதிக்குள் பூத் கமிட்டி பணிகளை நிறைவு செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கடினமாக உழைக்க வேண்டும். மேலும், அதிமுக-வுடன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தபோது 5 மக்களவை தொகுதிகளும், 1 மாநிலங்கவையும் ஒதுக்குவதாக தெரிவித்தனர். ஆனால் அந்த சீட் நமக்கு கொடுக்கவில்லை. சீட் தருவதாக கூறி பழனிசாமி நம்மை முதுகில் குத்திவிட்டார். முதல்வராக இருந்தவர், கட்சி தலைவராக இருக்கிறார், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் எனநம்பினோம். அதனால் நம்பிக்கையின் பேரில் கையெழுத்திட்டோம். அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம். பழனிசாமியின் பிரச்சார கூட்டத்துக்கு காசு கொடுத்து தான் அழைத்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினர்.















