கரூர் கே தனி நீதிபதி விசாரித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி: முழு விவரம்

புதுடெல்லி, அக். 11- கரூர் உயி​ரிழப்பு சம்​பவம் தொடர்​பான வழக்கை மதுரை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்​கும்​போது சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், தவெக தரப்​பில் தொடரப்​பட்​டுள்ள இந்த வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளி​வைத்​தனர். கரூரில் தவெக பிர​சா​ரக் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் எதிரொலி​யாக அரசி​யல் கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக்​கோரி வில்​லி​வாக்​கம் தினேஷ் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ரான விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​தும் உத்​தர​விட்​டிருந்​தார். இந்த உத்​தரவை எதிர்த்து தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செய​லா​ள​ரான ஆதவ் அர்​ஜூனா உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. தவெக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் கோபால் சுப்​ரமணி​யம், சி.ஆர்​யமா சுந்​தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர். இந்த வழக்​கில் சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து தனி நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார். வழக்​கில் தொடர்​பில்​லாத விஜய் சம்பவ இடத்​தில் இருந்து பொறுப்​பற்ற முறை​யில் ஓடி​விட்​ட​தாக கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார். தவெக தரப்​பில் வாதங்​களை முன்​வைக்க வாய்ப்​பும் அளிக்​க​வில்​லை. சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினையை காரணம் காட்டி போலீ​ஸார் தான் அந்த இடத்தை விட்டு செல்​லும்​படி விஜய்க்கு உத்​தர​விட்​டனர். பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்​க​வில்​லை. தனி நீதிப​தி​யின் உத்​தரவு தவெக-​வின் அரசி​யல் எதிர்​காலத்​துக்கு பாதிப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த வழக்கை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரித்து உத்​தர​விட்​டுள்ள நிலை​யில், அதே காரணத்​துக்​காக தொடரப்​பட்ட வழக்கை சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்து தனி​யாக சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உத்​தர​விட்டு இருப்​பது தவறான நடை​முறை. எனவே உச்ச நீதி​மன்​றமே ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில் சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்க வேண்​டும். இவ்​வாறு வாதிட்​டனர். இதற்கு ஆட்​சேபம் தெரி​வித்த தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, பி.​வில்​சன், அபிஷேக் மனு சிங்வி வாதிட்​டனர். உயி​ரிழப்பு சம்​பவத்​தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்​துள்​ளது.