கொடூர கொலை

உத்தர கன்னடா : செப்டம்பர் . 16 – தலை மீது பலமாக தாக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவரை கொடூராமாக கொலை செய்துள்ள சம்பவம் ஷிர்சியில் நடந்துள்ளது. கோரலக்கட்டா மாலஞ்சி வீதியின் வட்டினகொப்பா வனப்பகுதியில் சுமார் 50 முதல் 55 வயதான நபரின் உடல் ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது . உடலின் மீது இரண்டு சாண பைகள் போட்டு மூடப்பட்டிருந்தது . பின்னர் அதன் மீது இலைகள் போட்டு மூடப்பட்டுள்ளது . கோணி பையில் உடலை நிரப்பி காட்டு பகுதியில் வீசப்பட்டுள்ளது . என திர்யவந்துள்ளது. உடலின் வலப்புற காலின் இரண்டாவது விரலில் வெள்ளி கால் மோதிரம் அணியப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இந்த கொலை நடந்திருக்ககூடும் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது . நேற்று காலை பால் போடும் நபர் ஒருவர் இது குறித்து அறிந்து போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .இறந்தவர் உள்ளூர் வாசிகளுக்கு அறிமுகம் இல்லாதவராக உள்ளார் இவர் வேறு ஊரை சேர்ந்தவராக இருக்கக்கூடும் ஏன் கிராமத்தார் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.