Home Front Page News சாம்பார் பாத்திரத்தில் விழுந்து குழந்தை பலி

சாம்பார் பாத்திரத்தில் விழுந்து குழந்தை பலி

ஹாவேரி: ஜூன் 21 –
திருமண விழாவின் போது கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து பலத்த காயமடைந்த 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஷிகாவி தாலுக்காவின் குன்னூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஹுப்பள்ளி தாலுகாவில் உள்ள சன்னாபூர் கிராமத்தைச் சேர்ந்த மக்தும் சாப் சனாதி என்பவரின் மகள் ருக்ஸானாபானு சனாதி உயிரிழந்த சிறுமி. ஜூன் 14 ஆம் தேதி, ஷிகான் தாலுகாவின் குன்னூர் கிராமத்தில் உள்ள ஷெரிப்சாப் யாரகுப்பியின் வீட்டில் ஒரு திருமண விழாவிற்கு சிறுமி தனது பெற்றோருடன் வந்திருந்தார். வீட்டின் கூரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அருகில் இருந்த ஒரு பெரிய சாம்பார் பாத்திரத்தில் தற்செயலாக விழுந்துள்ளது சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடனடியாக குழந்தையை பாத்திரத்தில் இருந்து தூக்கினர். பலத்த தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட சிறுமி, ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, சிகிச்சை பலனின்றி குழந்தை குழந்தை பலியானது இந்த சம்பவம் தொடர்பாக தடாசா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Exit mobile version