
பெங்களூரு, மே.25-
சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோமசந்திரபாளையத்தைச் சேர்ந்த ராஜூவுக்கு ஆயுள் தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கே.என்.ரூபா உத்தரவு பிறப்பித்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் சிறுமியுடன் நட்பாக பழகிய ராஜு, பந்தேபாலயா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 2021 ஏப்ரல் 3ஆம் தேதி உடல் ரீதியிலான தொடர்பு வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். விசாரணைக்கு பின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. நீதிபதி கே.என்.ரூபா, குற்றவாளிக்கு தண்டனை விதித்து, இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.