
புதுடெல்லி, ஆக. 9- தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதிகள்,
ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம்,
உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி ஆகிய 7 தொகுதிகளுக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில், உத்தரபிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது.
மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது குறிப்பிடத்தக்கது.