பெங்களூரு, அக்டோபர் : 14
பஸ்காக காத்திருந்த பெண்ணிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய திருடன் எதிரே வந்தே வாகன மோதி சபலியான பரிதாப சம்பவம் ஆர்.டி.நகர் போக்குவரத்து காவல்நிலையத்தில் நடந்துள்ளது. கடந்த 9ம் தேதி காலை 11 மணியளவில் பெல்லாரி சர்வீஸ் சாலையில் ஹெப்பால் பஸ் நிலையம் அருகே சோடகரா மெஹ்ராஜ் என்ற பெண் பஸ்சுக்காக காத்திருந்தபோது, அவரது மொபைல் போனை திருடன் திருடன் பறித்துக் கொண்டு ஓடும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர்அருகில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் 40-45 வயது மற்றும் 5.3 அடி உயரம் கொண்டவர். சராசரியான உடலும் கொண்டவர். இறந்தவரின் இடது தோளில் ஒரு கருப்பு பிறப்பு அடையாளம் உள்ளது.
இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக 080-22943026, 22943027 அல்லது மொ.94808 01931 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஆர்.டி.நகர் போக்குவரத்து போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.