ஜனாதிபதிநாளை வருகை

நீலகிரி, ஆக.4- நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு வருகை தருகிறார். அதன்படி அவர், டெல்லியில் இருந்து காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அருகே மசினகுடியில் உள்ள ஹெலிபேடுவிற்கு வந்திறங்குகிறார்.தொடர்ந்து காரில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அங்கு ஆதிவாசி மக்கள் மற்றும் பாகன்களை சந்திக்கிறார். வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார்.பின்னர் ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம் பிடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோரை சந்தித்துவிட்டு மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார்.