Home Front Page News தகுதியற்ற பிபிஎல் ரேஷன் கார்டுகள் ரத்து – முதல்வர் விளக்கம்

தகுதியற்ற பிபிஎல் ரேஷன் கார்டுகள் ரத்து – முதல்வர் விளக்கம்

பெங்களூர், நவ. 18: தகுதியற்ற பிபிஎல் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படுகின்றன. தகுதியான அட்டைகள் ரத்து செய்யப்படவில்லை என முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
கனகதாசரின் திருநாளான இன்று எம்எல்ஏ பவன் வளாகத்தில் உள்ள கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகுதியானவர்களுக்கு பிபிஎல் கார்டு வழங்கும் பணியை செய்துள்ளேன். அந்தப் பணி தொடரும் என்றார். ஆனால் தகுதியில்லாத நபர்களின் பிபிஎல் கார்டு ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார்.
மாநிலத்தில் பிபிஎல் கார்டுகளை மாநில அரசு ரத்து செய்து வருவதாக பாஜக தலைவர் கூறியதைக் கண்டித்த அவர், தகுதியற்ற கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படுகின்றன என்றார். ஏழை மக்களின் அட்டைகள் ரத்து செய்யப்படவில்லை. ஏழைகளுக்கு உதவும் பணியை அரசு செய்துள்ளது என்றார்.கடந்த 2013-ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோது மாநிலத்தில் ரூ.1க்கு 1 கிலோ அரிசி வழங்கும் அன்னபாக்யா திட்டத்தை அமல்படுத்தினேன். அன்னபாக்யா யோஜனா திட்டத்தை பாஜக அமல்படுத்தியதா என்று வாதிட்ட அவர், பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அன்னபாக்ய யோஜனா திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இங்குதான் பாஜக விமர்சிக்கும் என்றார்.

சட்டப் போராட்டம்: கர்நாடக‌ மாநிலத்தில் எந்த உத்தரவாதத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று அங்குள்ள பத்திரிகைகளில் மகாராஷ்டிரா அரசு விளம்பரம் செய்துள்ளது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். மகாராஷ்டிர அரசு மீது வழக்கு தொடர யோசித்து வருவதாக அவர் கூறினார்.

Exit mobile version