
புதுடெல்லி,பிப்.27-
திரிபுரா நாகலாந்து மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. 3 மாநிலங்களிலும் எந்த கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
திரிபுராவில் பாஜக 36-45, இடது சாரிகள் 6-11 டிஎம்பி 9-16 இடங்களை பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
திரிபுராவில் பாஜக 36-45 இடதுசாரிகள் 6-11 இடங்களை பெறும் என என் டிவி கணிப்பை வெளியிட்டுள்ளது.
நாகலாந்தில் என்.டி.பி.பி – பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்,
மேகாலயாவில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேகாலயாவில் பாஜக 5 , காங்கிரஸ் 3, என்பிபி -20, பிற கட்சிகள் 30 இடங்களை பெறும் என டைம்ஸ் நவ் சேனல் கணித்துள்ளது.
நாகாலாந்து என்.டி.டி.பி 38-48, என்.பி.எப் 3-8 காங்கிரஸ் 1-2, பிறகட்சிகள் 5-15 இடங்களை பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.