‘தேஜஸ்’ விமானம் தீப்பிடித்து விபத்து: பைலட் உயிரிழப்பு

துபாய், நவ. 22- து​பா​யில் நடை​பெற்ற விமானக் கண்​காட்​சி​யில் சாகசத்​தில் ஈடு​பட்ட இந்​திய விமானப்​படை​யின் ‘தேஜஸ்’ போர் விமானம் கட்​டுப்​பாட்டை இழந்து தரை​யில் மோதி தீப்​பிடித்​தது. இந்த விபத்​தில் பைலட் உயி​ரிழந்​தார். துபாயில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மிகப் பெரிய அளவில் விமானக் கண்காட்சியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது.அந்த வகை​யில், துபா​யின் அல் மக்​தோம் சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கடந்த 17-ம் தேதி விமானக் கண்​காட்சி தொடங்​கியது.
இந்த கண்​காட்​சி​யில் உலகின் பல நாடு​களில் உள்ள 1,500-க்​கும் மேற்​பட்ட விமானம் மற்​றும் ட்ரோன் நிறு​வனங்​கள் தங்​கள் தயாரிப்​பு​களை காட்​சிக்கு வைத்​தன.
200-க்​கும் மேற்​பட்ட விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள் அணிவகுத்து நின்​றன. இதையொட்​டி, 12 கருத்​தரங்​கு​களும் நடை​பெற்​றன. அதில் 450-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​று, விமானத் தொழில்​நுட்​பம் தொடர்​பான தங்​களது கருத்​துகள், ஆலோ​சனை​கள், தொலைநோக்​குத் திட்​டங்​களை பகிர்ந்து கொண்​டனர். இந்​நிலை​யில், 5 நாள் கண்​காட்​சி​யின் நிறைவு நாளான நேற்​று, இந்​தியா சார்​பில் உள்​நாட்​டுத் தயாரிப்​பான எச்​ஏஎல் நிறு​வனத்​தின் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை காட்​சிப்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டது.