பன்றி பிடிக்க சென்ற 2 பேர் மூச்சுத் திணறி சாவு

சிக்கமகளூர், பிப். 28- முள்ளம் பன்றி இருந்த சுரங்கத்துக்குள், அதனை வேட்டையாட சென்ற இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
இது பற்றி தெரிய வந்திருப்பதாவது:
தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி விஜய் (28) சரத் (26 ). இவர்கள் ஆனேகுந்தி என்ற இடத்தில் உள்ள
பண்ணையில், மிளகு அறுவடை செய்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது சிக்கமகளூர் மாவட்டம், மூடிகரே தாலுக்கா, பாலூர் அருகே உள்ள மாளிகே நாடு என்ற இடத்தில் முள்ளம்பன்றிகள் பாதாளத்தில் இருப்பதாக இவர்கள் அறிந்துள்ளனர். இதனை வேட்டையாட சென்றுள்ளனர்.
பாதாள சுரங்கத்தில் சென்றதும் மூச்சு திணறல் ஏற்பட்டு அந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று இறந்த இருவர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.