பிஜேபி நிரந்தரமாக ஆட்சியில் இருந்து விட முடியாது – ராகுல்

லண்டன், மார்ச் 8-
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த நாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார். தொடர்ந்து சாத்தம் ஹவுஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிற சிந்தனையாளர் பேரவையில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சிதான் பெரும்பாலான காலகட்டத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. பாஜ.க.வின் ஆட்சிக்கு முன்பாக நாங்கள்தான் 10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினோம். ஆனால், இந்தியாவில் நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டோம். நாம்தான் நிரந்தரமாக ஆட்சி செய்வோம் என்று பா.ஜ.க. நம்புகிறது. ஆனால் அது நடக்காது. இந்திய ஜனநாயகத்துக்கு தேவைப்படுகிற பழுதுபார்க்கிற பணியை எதிர்க்கட்சிகள் கூட்டாக மேற்கொள்ள முடியும். பெகாசஸ் மென்பொருள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நாங்கள் நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தோம். ஆரம்பத்தில் நகர்ப்புறங்களைக் கவனிக்கத் தவற விட்டோம். அது உண்மைதான்.
காங்கிரஸ் கட்சி தவிர்த்து அன்னிய ஊடகங்களும், இந்திய ஜனநாயகத்தில் தீவிரமான பிரச்சினைகள் இருப்பதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. எனது செல்போனில பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது நடக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். மீது சாடல் ஆர்.எஸ்.எஸ்.சை ஒரு ரகசிய சமூகம் என்று நீங்கள் அழைக்கலாம். அது முஸ்லிம் சகோதரத்துவத்தின் பாதையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஜனநாயகப் போட்டியைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனநாயகப் போட்டியைத் தகர்ப்பதுவும்தான் அவர்களது எண்ணம். ஆர்.எஸ்.எஸ்., ஒரு அடிப்படைவாத, பாசிச அமைப்பாக செயல்படுகிறது. அது நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகப் போட்டியின் தன்மையை மாற்றி உள்ளது. பத்திரிகைத்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், தேர்தல் கமிஷன் என அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அழுத்தத்தின்கீழ் உள்ளன. அச்சுறுத்தலின் கீழ் இருக்கின்றன. ஒரு வழியில் அல்லது பிற வழியில் கட்டுப்படுத்தப்படுகின்றன.