புதிய அமைச்சரவை: ஜடேஜாவின்மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவியேற்பு

காந்தி நகர்: அக். 18-
குஜ​ராத் பாஜக அரசின் புதிய அமைச்​சரவை நேற்று பதவி​யேற்​றது. கிரிக்​கெட் வீரர் ரவீந்​திர ஜடேஜா​வின் மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவி​யேற்​றனர்.
குஜ​ராத்​தில் முதல்​வர் பூபேந்​திர படேல் தலை​மையி​லான பாஜக அரசு ஆட்​சி​யில் உள்​ளது. இந்​நிலை​யில் முதல்​வர் பூபேந்​திர படேலை தவிர்த்து குஜ​ராத் அமைச்​சர்​கள் 16 பேரும் நேற்று முன்​தினம் பதவி வில​கினர். இவர்​களில் கனு​பாய் மோகன்​லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்​பாய் படேல், குன்​வர்​ஜி​பாய் மோகன்​பாய் பவாலி​யா. பர்​ஷோத்​தம்​பாய் சோலங்கி ஆகிய 4 பேரை தவிர மற்ற அனை​வரின் ராஜி​னா​மாவை முதல்​வர் ஏற்​றுக்​கொண்​டார்.
இதையடுத்து குஜ​ராத் ஆளுநர் ஆச்​சார்ய தேவ்​ரத்தை முதல்​வர் பூபேந்​திர படேல் சந்​தித்​து புதிய அமைச்​சர்​கள் பட்​டியலை அளித்​தார்.இந்​தப் பட்​டியல் நேற்று காலை​யில் வெளி​யானது. இதில் கிரிக்​கெட் வீரர் ரவீந்​திர ஜடேஜா​வின் மனைவி ரிவாபா ஜடேஜா, ஸ்வரூப்ஜி தாக்​கூர், பிர​வீன்​கு​மார் மாலி, ருஷிகேஷ் படேல், தர்​ஷ்னா வகேலா, குன்​வர்ஜி பவாலியா உள்​ளிட்ட 21 பேர் இடம் பெற்​றிருந்​தனர்.