பெங்களூரு- மைசூரு சங்கிலி தொடர் விபத்து; 3 பேர் சாவு

பெங்களூரு: செப்டம்பர் . 26 -பெங்களூரு-மைசூரு இடையே 10 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழி விரைவுச்சாலையாகவும், 4 வழி சர்வீஸ் சாலையாகவும் உள்ளது. இந்த விரைவுச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நியைில் நேற்று ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா அருகே பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. கனமழை காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலை தடுப்பு சுவரை உடைத்து கொண்டு மற்றொரு சாலைக்கு சென்று எதிரே வந்த 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த சங்கிலி தொடர் விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தில் பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் பெயர் விவரம் உடனடியாக போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து சென்னப்பட்டணா போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹாசனைச் சேர்ந்த ரேணுகாம்மா, மஞ்சுளா, சுதிர் ஆகியோர் உயிரிழந்தனர்.
பெங்களூரில் இருந்து மைசூர் நோக்கி அடுத்தடுத்து சென்ற கார்கள் சன்னப்பட்டினம் தாலுகாவில் உள்ள தேவராஹோசஹள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி விவிபத்துக்குள்ளானது
படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான கார்கள் அனைத்தும் பெங்களூரில் இருந்து மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தன. இதில் சான்ட்ரோ காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் சென்னப்பட்டினம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
கடும் மழையின் பின்னணியில் கார்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதாகவும், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது