Home மாவட்டங்கள் பெங்களூர் பொறியியல் படிப்புக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: ஜூன் 27-
தமிழகத்தில் 2025-26 கல்வி ஆண்டின் இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பம் செய்த மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. இதையடுத்து தரவரிசை பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இந்த தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டார். இதன் அடிப்படையில் தான் மாணவ-மாணவிகள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட உள்ள நிலையில் இந்த தரவரிசை பட்டியலை எப்படி பார்க்கலாம்? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்று சுமார் 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரிகளில் கவுன்சிலிங் முறையில் ஒவ்வொரு ஆண்டும் பிஇ மற்றும் பிடெக் படிப்புக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் வரை உள்ளன. இந்நிலையில் தான் 2025-26ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 5ந்தேதி தொடங்கியது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்பிறகு பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடந்தது. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் வரை உள்ளன. இந்நிலையில் தான் 2025-26ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 5ந்தேதி தொடங்கியது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

Exit mobile version