Home Front Page News மகளிர் உரிமைத்தொகை விதி தளர்வு

மகளிர் உரிமைத்தொகை விதி தளர்வு

சென்னை: ஜூன் 30-
மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, பெண்​களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறி​வித்​தது. பின்​னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்​டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்​கப்​பட்​டது. இதை பெறு​வதற்​கும் சில நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன.
அதில், நான்கு சக்கர வாக​னம் (கார், ஜீப் போன்​றவை) வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள் திட்​டத்​துக்கு தகு​தி​யற்​றவர்​களாக கருதப்​பட்​டனர்.
அதே​நேரம், அரசின் நிபந்​தனை​களுக்​குட்​பட்டு தகு​தி​யுள்ள பெண்​களின் விண்​ணப்​பங்​கள் நிராகரிக்​கப்​பட்​ட​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதி முதல் நடை​பெறும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ சிறப்பு முகாம்​களில் கடந்த முறை விண்​ணப்​பித்து நிராகரிக்​கப்​பட்​ட​வர்​கள் மற்​றும் புதி​தாக ரேஷன் அட்டை பெற்​றவர்​கள் அனை​வரும் விண்​ணப்​பிக்​கலாம் என கூறப்​பட்​டது.
இதற்​கிடையே, திருப்​பத்​தூரில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பேசிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், “ஜூலை 15 முதல் நடை​பெறும் முகாம்​களில் விண்​ணப்​பித்த தகு​தி​யான பெண்​களுக்கு ஆகஸ்ட் அல்​லது செப்​டம்​பரில் ரூ.1,000 தொகை வழங்​கப்​படும். விண்​ணப்​பங்​களுக்கு 45 நாட்​களில் முடிவு அறிவிக்​கப்​படும்” என உறு​தி​யளித்​தார்.
இந்த நிலை​யில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்​டத்​தில் 3 முக்​கிய தளர்​வு​களை தமிழக அரசு அளித்து திட்​டத்​தின் பயனை விரிவுபடுத்​தி​யுள்​ளது. அதன்​படி, அரசுத்​துறை​களில் சிறப்பு கால​முறை ஊதி​யம் பெற்​று, தற்​போது ஓய்​வூ​தி​யம் பெறு​வோர் குடும்​பங்​களைச் சேர்ந்த ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் அல்​லாத பெண்​கள் திட்​டத்​தில் சேர விண்​ணப்​பிக்​கலாம். அரசு மூல​மாக மானி​யம் பெற்று 4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​களும் தகு​தி​யானவர்​கள்.
மேலும் இந்​தி​ரா​காந்தி தேசிய விதவை ஓய்​வூ​தி​யம், ஆதர​வற்ற விதவை​கள் ஓய்​வூ​தி​யம் பெறு​வோர் குடும்​பங்​களைச் சேர்ந்த ஓய்​வூ​தி​யம் பெறாத பெண்​களும் விண்​ணப்​பிக்​கலாம். கணவ​ரால் கைவிடப்​பட்ட 50 வயதுக்கு மேலாகி​யும் திரு​மணம் ஆகாத பெண்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களில் உள்ள மற்ற பெண்​கள் விண்​ணப்​பிக்​கத் தகுதி வாய்ந்​தவர்​கள் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான அரசாணையை சிறப்பு திட்ட செய​லாக்​கத்​துறைச்​ செயலர்​ பிரதீப்​ யாதவ் பிறப்பித்துள்ளார்.

Exit mobile version