Home Front Page News மனைவிக்கு தங்கசங்கிலி வாங்க ஏடிஎம்மில் கொள்ளை

மனைவிக்கு தங்கசங்கிலி வாங்க ஏடிஎம்மில் கொள்ளை

பெலகாவி, டிச. 3:
மனைவிக்கு தாலி கோர்க்க தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுப்பதற்காக ஏடிஎம்மில் கொள்ளையடித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நகரைச் சேர்ந்த கிருஷ்ண சுரேஷ் தேசாய் என்பவர் கைது செய்யப்பட்டவர். ஹெச்டிஎப்சி வங்கி ஏடிஎம்மில் ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கிருஷ்ணா ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யும் வேலை செய்து வந்தார். ஏடிஎம் இயந்திர சாவி அவரிடமே இருந்தது. குழுவுடன் வந்து பணத்தை டெபாசிட் செய்துவிட்டு, மாலையில் தனியாக வந்து ஏடிஎம்மில் கொள்ளையடித்துள்ளார்.
பணம் போடும் ஏடிஎம் இயந்திரத்தின் சாவியை பயன்படுத்தி எட்டு லட்சத்தை கொள்ளையடித்தார். 2 நாட்களுக்குப் பிறகு, அவரது செயல் வெளிச்சத்திற்கு வந்தது. மற்றவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஏடிஎம்மில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக மார்க்கெட் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இருந்து ஒரு தங்கத் தாலி, தங்கச் சங்கிலி, 7 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version