Home Front Page News மின்சாரம் தாக்கி விவசாயி, இரண்டு பசுக்கள் பலி

மின்சாரம் தாக்கி விவசாயி, இரண்டு பசுக்கள் பலி

மைசூர்: மே 26 –
மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவின் எச்சகள்ளி கிராமத்தில் அறுந்து விழுந்த மின்சார கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி இரண்டு பசுக்கள் உயிருக்கு போராடிய போது அவைகளை காப்பாற்ற உரிமையாளர் ஓடி சென்று முயற்சி செய்தார் அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது இதில் இரண்டு பசுக்களும் பசுக்களின் உரிமையாளரும் 3 உயிர்கள் பறிபோனது. இறந்தவர் எச்சகள்ளி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு (52) இதேபோல் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 நாட்டு மாடுகளும் இறந்தன.சித்தராஜு வயலில் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ​​மாடுகள் ஒரு மின்சார கம்பியை மீதித்தன இந்த நேரத்தில், பசுவின் உரிமையாளர் சித்தராஜுவும் பசுக்களைப் பாதுகாக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்தார்.
பலத்த மழை பெய்து கொண்டிருந்தது, சித்தராஜு வீடு திரும்பவில்லை. மாலையில் அவரது குடும்பத்தினர் தங்கள் பண்ணைக்குச் சென்றபோது, ​​மின் கம்பி அறுந்து கிடந்ததையும், சித்தராஜுவும் அவரது இரண்டு பசுக்களும் இறந்து கிடந்ததையும் கண்டனர். நஞ்சங்குடு கிராமப்புற போலீசார் பெஸ்காம் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version