மெட்ரோ ரயில் கட்டணம் மீண்டும் உயர்கிறது

பெங்களூரு: பிப்ரவரி 4-
பெங்களூரில் மெட்ரோ பயணிகள் மீண்டும் கட்டண உயர்வால் அதிர்ச்சியை சந்திக்க நேரிடும். பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பிப்ரவரி மாதத்திலேயே மெட்ரோ கட்டணங்களை குறைந்தது 5% அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.மெட்ரோ கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்களை மாற்றியமைக்கும் திட்டம் இருப்பதால், இந்த முறையும் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. குழுவின் பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், குறைந்தது 5 சதவீத கட்டண உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் மெட்ரோ கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டபோது பொதுமக்களின் கடும் எதிர்ப்பு எழுந்தது. சில வழித்தடங்களில் கட்டணங்கள் 71 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் இன்னும் மீளவில்லை என்றும் கூறப்படுகிறது. மெட்ரோ ரயில் கட்டணம் ஏற்கனவே அதிகமாக உள்ளது என்ற பயணிகள் அதிருப்தியில் உள்ள நிலையில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட இருப்பது மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி அலையை உருவாக்கி உள்ளது.