மேக வெடிப்பு – 7 பேர் பலி

புதுடெல்லி, ஆகஸ்ட். 14 – இமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால், மழை கொட்டி தீர்த்தது. சிறிது நேரத்தில் மாம்லை கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேகவெடிப்பு சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது; –
“மேக வெடிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும். இந்த கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின்படி, மண்டியில் அதிகபட்சமாக 236, சிம்லாவில் 59 மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 40 என மொத்தம் 621 சாலைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
கந்தகாட் மாவட்ட ஆட்சியர் சித்தார்த்தா ஆச்சார்யா கூறுகையில், மேக வெடிப்பு பேரழிவில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேரைக் காணவில்லை.
ஜாடோன் கிராமத்தில் மேக வெடிப்பு சம்பவம் பதிவாகிய பின்னர் ஐந்து பேர் மீட்கப்பட்டதாக கண்டகாட், சித்தார்த்தா கூறினார்.