
புதுடெல்லி மே.22-
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை நடத்திவரும் விசாரணை மற்றும் சோதனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. அமலாக்கத்துறை தனது வரம்புகளை மீறி செயல்பட்டு வருவதாகவும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் வழக்கில் கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடைபெற்றுள்ளது என அமலாக்கத்துறை கூற முடியுமா? டாஸ்மாக் ஊழியர்களின் செல்போன்களை குளோன் செய்துள்ளது அமலாக்கத்துறை.
தனிநபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி அமர்வு கூறின. மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்து பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.