
புதுடெல்லி,ஜூன்.10-
பெங்களூரில் ஆர்சிபி வெற்றி விழாவின்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக 11 பேர் பலியான சம்பவம் குறித்து காங்கிரஸ் மேல் இடத்தில் இன்று கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் விளக்கம் அளித்தனர். இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருப்பதாக மேல மேலிடம் அதிருப்தியில் உள்ளது. இந்த அதிருப்தியை குறைக்கும் வகையில் பெங்களூரில் நடந்தது என்ன என்பது குறித்து கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் விரிவான அறிக்கையை காங்கிரஸ் மேலிடத்தில் இன்று வழங்கினர். பெங்களூரில் ஆர்சிபி வெற்றி விழாவின்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக 11 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது அவசர அவசரமாக இந்த விழாவை நடத்தியதன் விளைவாகத்தான் இத்தனை உயிர்கள் பலியாகி இருப்பதாக கர்நாடக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது மேலும் சம்பவம் நடப்பதற்கு முன்பே விதான சவுதா பாதுகாப்பு போலீஸ் அதிகாரி அரசு உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் அதாவது. கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக கூடுவார்கள் அவர்களை கட்டுப்படுத்தும் அளவில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று அவர் அந்த கடிதத்தில் எழுதியது அம்பலம் ஆனது இதனால் கர்நாடக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன காங்கிரஸ் மேலிடம் கோபம் அடைந்தது இந்த தொடர்ந்து கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் வருமாறு அழைப்பு விடுத்தது இதன்படி கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் டெல்லி சென்றனர். ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பெங்களூரில் நடந்த துயர சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர். இந்த விவகாரத்தில் அரசு எந்த தவறும் செய்யவில்லை எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆக்கி ஆதாயம் பார்க்க அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக விளக்கம் அளித்தனர். விதான சவுதா எதிரே எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை சின்னசாமி ஸ்டேடியம் எதிரே தான் நெரிசல் ஏற்பட்டது என்று விளக்கம் கூறினர் கூட்ட நெரிசலின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, காவல் ஆணையர் உட்பட ஐந்து காவல் அதிகாரிகளை நாங்கள் இடைநீக்கம் செய்துள்ளோம். நாங்கள் ஒரு மாஜிஸ்திரேட் மற்றும் நீதித்துறை விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளோம். விசாரணை அறிக்கை வெளிவந்த பிறகு குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்தியிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்ட நெரிசல் சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதை ராகுல் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று கடுமையாகப் பேசியதாகவும், கட்சியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ராகுலின் கோபத்தைத் தணிக்க முயன்ற இரண்டு தலைவர்களும் அரசாங்கத்தின் மீது தவறு செய்யவில்லை. மைதானத்திற்கு அருகில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக இது நடந்தது. காவல்துறை அதிகாரிகள் போதுமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அதனால்தான் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்காலத்தில் எந்தத் தவறும் செய்யாமல் கவனமாக இருப்போம் என்று ராக ராகுல் காந்தியிடம் உறுதி அளித்தனர்
முதல்வர் சித்தராமையாவின் வார்த்தைகளை அமைதியாகக் கேட்ட ராகுல், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கவனமாக இருக்கவும், எதிர்க்கட்சிகளின் வாய்க்கு அவுல் கொடுக்காமல் இருக்கவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பொதுச் செயலாளர் வேணுகோபால் மற்றும் மாநிலப் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரைச் சந்தித்து மாநிலத்தின் அனைத்து முன்னேற்றங்கள் குறித்தும் ஆல ஆலோசனை நடத்தினர்