தமிழக முதல்வர் நாளை சேலம் வருகை11 கி.மீ. சாலை அணிவகுப்பு

சேலம்: ஜூன் 10 –
சேலத்​துக்கு 2 நாள் பயண​மாக நாளை (ஜூன் 11) வரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்​கேற்​கிறார். 12-ம் தேதி மேட்​டூர் அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு நீர் திறந்து வைக்​கிறார். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 2 நாள் பயண​மாக சேலத்​துக்கு நாளை வரு​கிறார். காலை 10 மணிக்கு சென்​னையி​லிருந்து விமானத்​தில் கோவை வரும் முதல்​வர் அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக ஈரோடு மாவட்​டம் பெருந்​துறை செல்​கிறார்.
அங்கு நடை​பெறும் வேளாண் கண்​காட்சி மற்​றும் கருத்​தரங்​கத்தை தொடங்கி வைத்து 50 ஆயிரம் விவ​சா​யிகளுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கு​கிறார். பின்​னர் அன்று மாலை சேலம் செல்​லும் முதல்​வர் திமுக நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனை மேற்​கொள்​கிறார். அன்​றிரவு மேட்​டூரில் தங்​கு​கிறார். மறு​நாள் 12-ம் தேதி மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்து வைக்​கிறார். பின்​னர் சேலம் இரும்​பாலை அரு​கே​யுள்ள அரசு மோகன் குமாரமங்​கலம் மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெறும் அரசு விழா​வில் பங்​கேற்​கிறார்விழா​வில், ஒரு லட்​சம் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​யும், புதிய திட்​டப்​பணி​களுக்கு அடிக்​கல் நாட்டி​யும்,முடிவுற்ற திட்​டப்​பணி​களைத் திறந்து வைத்​தும் முதல்​வர் பேசுகிறார். இதையொட்​டி, விழா நடை​பெறும் அரசு மோகன் குமாரமங்​கலம் மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் முன்​னேற்​பாடு பணி​களைசுற்​றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்​தார். அப்​போது மாவட்ட ஆட்​சி​யர் பிருந்​தாதேவி, அரசுத் துறை அலு​வலர்​கள் உடனிருந்​தனர்.
பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறியது: முதல்​வர் ஸ்டா​லின், 11-ம் தேதி ஈரோடு மாவட்​டம் பெருந்​துறை​யில் நிகழ்ச்​சியை முடித்​துக் கொண்​டு, பவானி வழி​யாக சேலத்​துக்கு அன்று மாலை 5 மணிக்கு வரு​கிறார். சேலம் மாவட்ட எல்​லை​யான நவப்​பட்டி பெரும்​பள்​ளம் பகு​தி​யில் திமுக தொண்​டர்​களின் வரவேற்பு நிகழ்ச்சி நடக்​கிறது. அங்​கிருந்து 11 கி.மீ. தூரத்​துக்கு நடை​பெறும் ரோடு ஷோவில் முதல்​வர் ஸ்டா​லின் பங்​கேற்று பொது​மக்​கள், கட்​சி​யினரை சந்​திக்​கிறார். இரவு மேட்​டூர் பொதுப்​பணித் துறை ஆய்வு மாளி​கை​யில் தங்​கு​கிறார்.மறு​நாள் 12-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறந்து வைக்​கிறார். பின்​னர், மேச்​சேரி, ஓமலூர் வழி​யாக சேலம் இரும்​பாலை அரசு மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள விழா மேடைக்கு வந்​து, பொது​மக்​களுக்கு பல்​வேறு துறை சார்​பில் நலத்​திட்ட உதவி​களை வழங்கி பேசுகிறார். மதிய உணவு முடித்​துக் கொண்டு சேலம் காமலாபுரம் விமான நிலை​யத்​தில் இருந்து சென்னை புறப்​பட்​டு செல்​கிறார்.