Home Front Page News ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை

ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை

புதுடெல்லி: ஜூலை 26 –
பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.
மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் இதுதொடர்​பாக எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “இந்​தி​யா​விலேயே முதன் முறை​யாக சென்னை ஐசிஎப்​-ல் ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது.
இந்​தியா 1,200 எச்பி திறன் கொண்ட ஹைட்​ரஜன் ரயில் இன்​ஜின் தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் வருங்காலத்​தில் இந்த தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்தி வரும் முன்​னணி நாடு​களின் பட்​டியலில் இந்​தி​யா​வும் இடம்​பெறும்.
ஜீரோ கார்​பன் உமிழ்வு நிலையை அடைய பல்​வேறு நடவடிக்​கைகள் முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளன. அந்த வகை​யில், நாட்​டின் போக்கு​வரத்​தில் முதன்​மை​யாக உள்ள ரயில்​வே​யில் ஹைட்​ரஜன் இன்​ஜினை பயன்​பாட்​டுக்கு கொண்டு வரு​வதன் மூலம் அந்த இலக்கை நாம் விரை​வாக அடைய முடி​யும்’’ என்று தெரி​வித்​துள்​ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்​களவை​யில் பேசிய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், ‘‘பாரம்​பரிய நகரங்​களுக்கு ஹைட்ரஜன்’’ என்ற திட்​டத்​தின் கீழ் 35 ஹைட்​ரஜன் ரயில்​களை இயக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரி​வித்​தார். மேலும், ஒவ்​வொரு ரயிலும் ரூ.80 கோடி செல​விலும், ஒவ்​வொரு பாதை​யின் கட்​டமைப்பை உரு​வாக்க ரூ.70 கோடி செல​விடப்​படும் என்​றும்​ அவர் கூறியிருந்​தார்​.

Exit mobile version