Home Lead News 2025 புத்தாண்டு – பலத்த பாதுகாப்பு

2025 புத்தாண்டு – பலத்த பாதுகாப்பு

பெங்களூரு, டிசம்பர் 31-
2025 புத்தாண்டு முன்னிட்டு பெங்களூர் உட்பட கர்நாடகா மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது சுற்றுலா தலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உற்சாகத்தால் எல்லை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க மாநிலம் முழுவதும் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டத்திற்கு புறம்பாக புத்தாண்டை கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
விதிகளை மீறி கேளிக்கை மற்றும் பொழுது போக்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். டிசம்பர் 31ம் தேதி காலை 6 மணி முதல் ஜனவரி 1ம் தேதி இரவு 8 மணி வரை தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கப்பட்டணா தாலுக்காவின் கேஆர்எஸ் பேக்வாட்டர், பாலமுரி, எட முரி ஆகிய இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காவிரி கரையோரம் உள்ள மளவள்ளி தாலுகாவில் உள்ள முட்டத்தி வனப்பகுதியிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கரிகாட்டா, கஞ்சத்தில் உள்ள சங்கம், கோசாய் காட் மற்றும் கரேகுரா அருகே காவேரி ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்து தாசில்தார் பரசுராம் சத்திகேரி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலைப் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி காலை 7 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் டாக்டர். என். சிவசங்கர் கூறினார்.
சிக்கமகளூரு மாவட்டத்தில் முல்லையனகிரி, சீத்தலையனகிரி, மாணிக்யதாரா, ஜரி நீர்வீழ்ச்சி ஹொன்னம்மனஹள்ளி, காடி கெரே, ஹிரேகொளலே கெரே, எட்டினபூஜா, தேவரமானே, பல்லாலராய துர்கா, ராணி ஜரி, பந்தஜே அருவி, குடிகே, ஹீத்ரஅண்ணாக்கி, கெடஅல்லாகி, கெடஅல்லாகி, போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன . பல்வேறு இடங்களில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி காலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மீனா நாகராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள முருதேஷ்வர் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற கோலாரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அப்போதிருந்து, கடற்கரை பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்டது. இந்த கட்டுப்பாடு புத்தாண்டு வரை தொடரும். இது குறித்து சிக்கமகளூரில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் விக்ரம் அமதே, நீதிமன்ற உத்தரவுப்படி இரவு 10 மணிக்கு மேல் பொது இடங்களில் ஒலி அமைப்பு, பட்டாசு வெடிக்கக் கூடாது. ரேவ் பார்ட்டி அல்லது போதைப்பொருள் உட்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கர்நாடகம் உள்ளிட்ட நாடு முழுவதும் களைட்டியுள்ளது

Exit mobile version