67 லட்சம் விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி நிதியுதவி: முதல்வர்

பெங்களூரு/ஹாவேரி.மார்ச் 10- பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் 67 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ பொம்மை தெரிவித்துள்ளார்.
10 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கும் புதுமையான திட்டம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சம் பெண்கள் பயனடைவார்கள். ஒவ்வொரு வாரமும் ஸ்திரீ சக்தி யோஜனா திட்டத்துக்கான மானியம் விடுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார் ஹாவேரியில் மத்திய, மாநில அரசு திட்ட பயனாளிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், வங்கியாளர்களை தொடர்பு கொண்டு இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தா யுவசக்தி யோஜனா, கிராமப்புற பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மாநிலத்தில் உள்ள 40 லட்சம் மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பியுசி, பட்டதாரி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்