
புதுடெல்லி, செப்டம்பர் 8-கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் கேரளம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களில் அடங்கிய 7 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.