
வாணியம்பாடி, பிப்.23
வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆண்டியப்பனூர் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சுமார் 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்க அணையினை சரிவர பராமரிக்கப்படாததால் அணையினை புனரமைக்க அப்பகுதி விவசாயிகள் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபிலிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று தற்போது அனையிணை புனரமைக்க தமிழக அரசு சுமார் 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் நீர்த்தேக்க அனை புனரமைக்கப்ட்டு வரும் பணிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்தரருக்கு கோரிக்கை விடுத்து பேசினார் நிகழ்ச்சியின் போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் குட்லக் ரமேஷ் ,நகர அவைத்தலைவர் சுபான் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்