தெஹ்ரான், ஜூன் 30- ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியிருந்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஈரானுக்குள் ஊடுருவிய மொசாட் உளவாளிகள்தான் காரணம் என்று கூறி ஈரானுக்குள் செயல்படும் ஸ்டார்லிங்க் இணைய சேவையை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்று சொல்லிதான் கடந்த 13ம் தேதி அந்நாட்டின் மூன்று அணு ஆய்வு மையங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. ஆனால் இது வெற்றிப்பெறவில்லை. இதனையடுத்து நேரடியாக களத்தில் குதித்த அமெரிக்கா, கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் அணு உலைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. முழுமையாக அணு உலைகள் அழிக்கப்பட்டுவிட்டன என்று டிரம்ப் கூறினார்.
இதனை மறுத்த ஈரான், பலத்த சேதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் எங்களால் நிச்சயம் மீண்டு வர முடியும் என்று தெளிவுப்படுத்தியிருந்தது.