Home சினிமா விவாகரத்திற்கு முன்பு கடைசியாக தனியாக பேசிய தனுஷ்- ஐஸ்வர்யா

விவாகரத்திற்கு முன்பு கடைசியாக தனியாக பேசிய தனுஷ்- ஐஸ்வர்யா

சென்னை, நவ. 30. நடிகர் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து ஆனது. ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் யாருடன் வாழ்வார்கள் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் அது பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக பிரிவது அறிவித்திருந்தனர். அதைத்தொடர்ந்து ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இவர்களை போலவே ஒன்றாக விவாகரத்தை அறிவித்திருந்தார்கள். அடுத்ததாக பல பிரபலங்கள் விவாகரத்து செய்திகளை அறிவித்து கொண்டிருக்கின்றனர். இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளும் ஐஸ்வர்யாவிற்கும் தனுஷுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஆனால் திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் புயல்வீச தொடங்க, இருவரும் 2022 ஆம் ஆண்டு பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தங்களின் பிரிவை அறிவித்த பிறகு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் நிகழ்ச்சியில் ஒன்றாக வரவில்லை. இருவரும் தனித்தனியாக தான் வந்து கொண்டு இருந்தனர். தங்களுடைய விவாகரத்தை அறிவித்த பிறகு எந்த இடத்திலும் அது பற்றி பேசவில்லை. ஆனால் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் தனுஷ் குடும்பத்தினரும் இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்திருக்கின்றனர். ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தனுஷ் வந்தால் ஐஸ்வர்யா வராமல் இருப்பார், ஐஸ்வர்யா வந்தால் தனுஷ் வராமல் இருப்பார். இதனால் இவர்கள் இருவருக்கும் பிரிவதற்கு மனமில்லை என்றெல்லாம் செய்திகள் பரவி வந்தன.
ஆனால் இந்த வழக்கின் கடைசி ஹியரிங் நவம்பர் 27ஆம் நடைபெற்றது. அப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போதும் தாங்கள் பிரிவதில் உறுதியாக இருந்ததால் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி இருக்கிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து இருப்பதை தொடர்ந்து அவர்களுடைய குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்கா யாரிடம் வளர்வார்கள் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி கோ பேரண்டிங் முறையில் தங்களின் குழந்தைகளை இருவரும் வளர்த்தார்களோ அதுபோலவே இப்போதும் தனுஷும் ஐஸ்வர்யாவும் வளர்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Exit mobile version