Home செய்திகள் உலக செய்திகள் அடி வாங்கிய பிறகும் அடங்காத பாகிஸ்தான்

அடி வாங்கிய பிறகும் அடங்காத பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்:ஜூன் 24- சிந்து நதிநீர் உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா மறுத்தால் போர் மூளும் என்று பிலாவல் பூட்டோ கூறியிருக்கிறார்.. மேலும், இந்த உடன்படிக்கையை இடைநிறுத்தியது சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியா இதுபோல செய்வதாகத் திமிராகப் பேசிய அவர், பேச்சுவார்த்தை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் பெரியளவில் மோதல் ஏற்பட்டிருந்தது. கடந்த ஏப்ரலில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். அந்த தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் உதவியதாகச் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அடியைக் கொடுப்பதாக இருந்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் உட்படப் பல மாகாணங்கள் சிந்து நதி நீரையே நம்பி இருந்தது. இந்தியா திடீரென அதிலிருந்து விலகியது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய சிக்கலைக் கொடுப்பதாகவே இருக்கிறது. பூட்டோ திமிர் பேச்சு இதற்கிடையே சிந்து நதிநீர் உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா மறுத்தால் போர் மூளும் என்று பிலாவல் பூட்டோ திமிராகப் பேசியுள்ளார். இது தொடர்பாகப் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, “சிந்து நதிநீர் உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை இந்தியா மறுத்தால் பாகிஸ்தான் போருக்குச் செல்லும்.. இந்தியாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது..உடன்படிக்கையைச் சட்டவிரோதமாக இந்தியா நிறுத்தியதற்குப் பதிலடி கொடுப்போம்” என்றார்.

Exit mobile version