டெல்லி:நவ.14 – இந்தியாவில் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. வரும் 22 ஆம் தேதி நடைபெறும் நிலைக்குழு ஆலோசனையில் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இந்தியாவில் தற்போது ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் வரும் 22 ஆம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் எம்பி திக் விஜய் சிங் தலைமையில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமாக பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இது தவிர கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், விளையாட்டு தொடர்பாகவும் இந்த குழு ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.Read more at: https:// இந்த கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் மற்றும் இளைஞர் குரல் இயக்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் குழு முன்பு ஆஜர் ஆகின்றார்கள். தேசிய பெண்கள் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் மற்றும் என்சிஇஆர்டி, கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 என்றும், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்தால், அது குழந்தை திருமணம் என்றும், இதற்கு சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த நிலையில், குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 2021 ஆம் ஆண்டு குழந்தை திருமண தடுப்பு திருத்த மசோதா உருவாக்கப்பட்டது. இந்த மசோதாவில், ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயதை போலவே பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதையும் 21 ஆக நிர்ணயிக்க வகை செய்தது.