Home செய்திகள் உலக செய்திகள் உக்ரைன் போர்க்களத்தில் வட கொரிய வீரர்கள்

உக்ரைன் போர்க்களத்தில் வட கொரிய வீரர்கள்

மாஸ்கோ:ஏப்.28- ரஷ்யா முதன்முறையாக உக்ரைன் போரில் வட கொரியா படை வீரர்கள் பங்கேற்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா, அந்நாட்டின் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்ய ராணுவம் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ரஷ்யா வட கொரியாவை சேர்ந்தவர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என அண்மையில் ஜெலன்ஸ்கி புகார் கூறியிருந்தார்.இந்நிலையில், ரஷ்யா முதன்முறையாக உக்ரைன் போரில் வட கொரியா படை வீரர்கள் பங்கேற்பை அறிவித்துள்ளது.இது குறித்து ரஷ்யாவின் தலைமை ராணுவ கண்காணிப்பாளர் வலேரி ஜெராசிமோவ் கூறியதாவது: வட கொரிய படை வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்துப் போராடியுள்ளனர்.

Exit mobile version