Home Front Page News பெண் கொலை தீவிர விசாரணை

பெண் கொலை தீவிர விசாரணை

புதுடெல்லி: ஜூன் 26 டெல்லியில் பர்தா அணிந்து இளம் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். வடகிழக்கு டெல்லி அசோக் நகரில் 5 மாடி கட்டிடம் ஒன்றின் மேல் தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் நேகா (19). இவர் கடந்த திங்கட்கிழமை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக டெல்லி போலீஸார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பர்தா அணிந்த ஒருவர் அக்கட்டிடத்தில் நுழைவதும் பிறகு திரும்பிச் செல்வதும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் உ.பி.யின் ராம்பூரை சேர்ந்த தவுஃபீக் (26) என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “தவுஃபீக்கும் நேகாவும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் குடும்பத்தினர் பார்த்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய தவுஃபீக் முடிவு செய்தார். இதற்கு நேகா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Exit mobile version