மும்பை: ஜூன் 23-
ஆமதாபாதில் நடந்த விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணமாக, 25 லட்சம் ரூபாய் வழங்கும் பணி துவங்கியுள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஜூன் 12ல் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள லண்டனுக்கு புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ விமானம் விபத்துக்குள்ளானது.
ஆமதாபாதில் உள்ள மருத்துவக் கல்லுாரி விடுதியில் மோதி ஏற்பட்ட இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் 29 மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் என, 270 பேர் பலியாகினர்.
ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு, தலா 1 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என, ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்தும் டாடா குழுமம் அறிவித்திருந்தது.இதைத் தவிர, தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தது.
இடைக்கால நிவாரணமாக, தலா 25 லட்சம் ரூபாயை இதுவரை மூன்று குடும்பத்தினர் பெற்றுள்ளனர்.
மற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆவணங்கள் வழங்குதல், டி.என்.ஏ., அடையாளம் காணுதல், இறந்த உடல்களை கொண்டு செல்வது, இறுதிச் சடங்கு ஏற்பாடு களை ஒருங்கிணைக்கவும் கடந்த 15 முதல் உதவி மையமும் செயல்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.