Home Front Page News விபத்து: 5 பேர் உயிரிழப்பு

விபத்து: 5 பேர் உயிரிழப்பு

அலிகார்: நவ. 21: உத்தரபிரதேசத்தில் டபுள் டெக்கர் பஸ், லாரி மீது மோதிய விபத்தில் 5 மாத குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசம், அலிகார் அருகே உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் டில்லியில் இருந்து அஸாம்கரை நோக்கி, பயணிகளை ஏற்றிக் கொண்டு டபுள் டெக்கர் பஸ் சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இதில், 5 மாத குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்ஸின் இடிபாடுகளில் சிக்கினர். இதனை அறிந்த உள்ளூர் மக்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version