Home Front Page News இந்​திரா அமல்​படுத்திய அவசர நிலை – ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர்

இந்​திரா அமல்​படுத்திய அவசர நிலை – ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர்

திருவனந்தபுரம்: ​ஜூலை 11-
முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்​தியாயம் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார்.
இதுதொடர்​பாக மலை​யாள நாளிதழில் அவர் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி நாட்​டில் அவசர நிலையை அமல் செய்​தார். கடந்த 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை 21 மாதங்​கள் அவசர நிலை அமலில் இருந்​தது.இந்த அவசர நிலை காலத்​தில் நான் அமெரிக்​கா​வில் உயர் கல்வி பயின்று கொண்​டிருந்​தேன். அங்​கிருந்து இந்​தி​யா​வின் நிலையை மிக​வும் உன்​னிப்​பாகக் கண்​காணித்​தேன். அவசர நிலை​யின்​போது மக்​களின் அடிப்​படை உரிமை​கள் பறிக்கப்பட்டன. செய்​தி​யாளர்​கள், சமூக ஆர்​வலர்​கள், எதிர்க்​கட்சி தலை​வர்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். சிறை​களில் மனித உரிமை​கள் அப்​பட்​ட​மாக மீறப்​பட்​டன.
இந்​திரா காந்​தி​யின் மகன் சஞ்​சய் காந்​தி, கட்​டாய கருத்​தடை திட்​டத்தை அமல்​படுத்​தி​னார். இது அவசர நிலை​யின் அவலத்துக்குமிகச் சிறந்த உதா​ரணம் ஆகும். தலைநகர் டெல்லி உள்​ளிட்ட நகரங்​களில் குடிசை பகு​தி​கள் இடிக்​கப்​பட்​டன. ஆயிரக்​கணக்​கான ஏழைகள் வீடு, உடைமை​களை இழந்து பரித​வித்​தனர்.இந்​திரா காந்​தி​யின் அவசர நிலை, நமக்கு பல்​வேறு பாடங்​களை கற்றுத் தந்​திருக்​கிறது. அப்​போது நாட்​டின் 4-வது தூணான பத் திரிகை துறை​யின் சுதந்​திரம் பறிக்​கப்​பட்​டது. நீதித்​துறை​யின் சுதந்​திரம் பாதிக்​கப்​பட்​டது. நாடாளு​மன்​றம் முடக்​கப்​பட்​டது. இது​போன்ற சூழல் இனிமேல் ஏற்​படக்​கூ​டாது என்ற படிப்​பினையை அவசர நிலை நமக்கு கற்​றுத் தந்​திருக்​கிறது. இன்​றைய இந்​தி​யா, கடந்த 1975-ம் ஆண்டு இந்​தியா கிடை​யாது. இப்​போது நமது நாடு மிக​வும் வலு​வாக, வளமாக இருக்​கிறது. நாட்டின் சுதந்​திரம் செழித்​தோங்கி வளர்ந்து வரு​கிறது. கடந்த 1975-ம் ஆண்​டில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, இந்​தி​யா​வின் கருப்பு அத்​தி​யா​யம் ஆகும். இதில் இருந்து நாம் பல்​வேறு பாடங்​களை கற்​றுக் கொண்​டிருக்​கிறோம். எந்த சூழலிலும் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்பட அனு​ம​திக்​கக்​கூ​டாது. அடக்​கு​முறைக்கு எதி​ராக வீர​மாக, தீர​மாகப் போரிட வேண்​டும். இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

Exit mobile version