Home Front Page News பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

இஸ்லாமாபாத்: ஜூலை 18 – பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. தலைநகர் இஸ்​லா​மா​பாத், ராணுவ தலை​மையக​மான ராவல்​பிண்டி உட்பட பல்​வேறு நகரங்​கள், கிராமங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன.ஜீலம், சிந்​து, சட்​லஜ், ஜில்​ஜிட், ஸ்வாட் உள்​ளிட்ட நதி​களில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. கனமழை காரண​மாக பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணம் முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​பட்டு இருக்​கிறது.
இதுகுறித்து பாகிஸ்​தான் பேரிடர் மீட்பு துறை​யின் செய்​தித் தொடர்​பாளர் பரூக் அகமது கூறும்​போது, “கனமழை காரண​மாக பாகிஸ்​தான் முழு​வதும் பேரழிவு ஏற்​பட்​டிருக்​கிறது. பல்​வேறு கிராமங்​கள், நகரங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன. மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த புதன்​கிழமை மட்​டும் 30 பேர் உயி​ரிழந்​தனர். கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் 300-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்து உள்​ளனர். ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்டு இருந்த பயிர்​கள் நாச​மாகி உள்​ளன” என்று தெரி​வித்​தார்.
சர்​வ​தேச சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் கூறிய​தாவது:பரு​வநிலை மாறு​பாட்​டால் பாகிஸ்​தான் மிக​வும் மோச​மாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. கடந்த 2022-ம் ஆண்​டில் ஏற்​பட்ட பெரு​மழை​யின்​போது பாகிஸ்​தானில் 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர். 40 பில்​லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்​பட்​டது. தற்​போதும் அது​போன்ற சூழல் உரு​வாகி வரு​கிறது. பாகிஸ்​தான் முழு​வதும் 13,000 மலைச்​சிகரங்​கள் உள்​ளன. பரு​வநிலை மாறு​பாட்​டால் அவற்றின் பனி உருகி பெரு​வெள்​ளத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றன.
பாகிஸ்​தானின் பொருளா​தா​ரம் மிக மோச​மாக பாதிக்​கப்​பட்டு இருக்​கிறது. அந்த நாட்டு மக்​கள் தொகை​யில் 50 சதவீதத்​துக்​கும் மேற்​பட்​டோர் குடிசை வீடு​களில் வசிக்​கின்​றனர். இதன் ​காரண​மாக இயற்கை பேரிடரின்​போது பெரும் பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன. பரு​வநிலை மாறு​பாட்டை சமாளிக்க பாகிஸ்​தான் அரசு போதிய நடவடிக்​கைகளை எடுத்​தால் மட்​டுமே வெள்ள பாதிப்​பு​களில் இருந்து மக்​களை காப்​பாற்ற முடி​யும். இவ்​வாறு சர்​வ​தேச சுற்​றுச்​சூழல்​ ஆர்​வலர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

Exit mobile version