Home Lead News அமைதியான வாக்குப்பதிவு

அமைதியான வாக்குப்பதிவு

மும்பை நவம்பர் 20-
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவாலாக மாறியுள்ள மகாராஷ்டிரா சட்டசபையின் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் சட்டசபையின் 2வது கட்டமாக 39 தொகுதிகளுக்கும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த மத்திய தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 23ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளில் 4,136 வேட்பாளர்களின் தலைவிதியை வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். மொத்தம் 9,6369,410 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுடன், மத்திய தேர்தல் ஆணையம் 1,00,186 வாக்குச் சாவடிகளை அமைத்துள்ளது.
காலை முதலே வாக்காளர்கள் தங்களது உரிமைகளை நிறைவேற்ற அடையாள அட்டையுடன் வாக்குச் சாவடி முன் வரிசையில் நின்று வாக்களித்தனர். குறிப்பாக முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் ஆர்வத்துடன் அடையாள அட்டையை காண்பித்து உரிமையைப் பயன்படுத்தினர்.
இன்று காலை மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு நேரம் ஆக ஆக வேகம் பிடித்தது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு விரைந்து வந்து தங்களது உரிமையைப் பயன்படுத்தினர்.
ஆளும் மகா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 149 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான என்சிபி 59 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மகாவிகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சிவசேனாவின் யுபிடி 95 வேட்பாளர்களும், சரத் பவாரின் என்சிபி 86 வேட்பாளர்களும் உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ. 20) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல் இரண்டு மணி நேரத்தில் 6.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதனால் அங்கு வாக்குப்பதிவு மந்தமடைந்துள்ளது.
அந்த மாநிலத்தில் அதிகபட்சமாக கச்சிரோலி (Gadchiroli) மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.33 சதவீத வாக்குகள் பதிவாகின. சோலாப்பூரில் 5.07 சதவீத வாக்குகள் பதிவு. மும்பை நகர பகுதியில் 6.25 சதவீத வாக்குகள் பதிவு. குறிப்பாக தாராவி தொகுதியில் 4.71 சதவீத வாக்குகள் மட்டுமே காலை 9 மணி நேர நிலவரப்படி பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சினிமா, விளையாட்டு மற்றும் தொழிலதிபர்கள் என பிரபலங்கள் பலர் வசித்து வருகின்ற காரணத்தால் அவர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா தேர்தல் களம்: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்த சூழலில் மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாநிலத்தில் மொத்தம் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 158 கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
23-ல் வாக்கு எண்ணிக்கை: தானே மாவட்டம் கோப்ரி-பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போட்டியிடுகிறார். துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தெற்கு-மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மும்பை வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். இவர் கடந்த ஜனவரியில் காங்கிரஸில் இருந்து விலகி ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்​தில் இன்று 2-ம் கட்ட சட்டப்​பேர​வைத் தேர்தலூக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 12.71 சதவீத வாக்குகள் அங்கு பதிவு.
இன்று அந்த மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 66.65 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் மொத்தம் 81 சட்டப்​பேர​வைத் தொகு​திகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்​கட்​டமாக 43 தொகு​தி​களுக்கு தேர்தல் நடைபெற்​றது. இரண்​டாம் கட்டமாக இன்று 38 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடைபெற உள்ளது. இந்த தொகு​தி​களில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்பாளர்கள் களத்​தில் உள்ளனர்.
ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்​ட​ணிக்​கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நிலவு​கிறது.
ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 சட்டப்​பேர​வைத் தொகு​தி​கள், வயநாடு, நான்டெட் மக்​கள​வைத் தொகு​தி​களின் இடைத்​தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை​யும் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.

Exit mobile version