Home Lead News குண்டு வெடித்து 3 பேர் பலி

குண்டு வெடித்து 3 பேர் பலி

கொல்கத்தா, டிசம்பர் 9-
குண்டு வெடித்து 3 பேர் பலியானார்கள் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர் இந்த கொடூர சம்பவம் மேற்கு வந்து மாநிலம் கொல்கத்தாவில் நடந்துள்ளது
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கியர்தலாடா பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு நாட்டு வெடிகுண்டு வெடித்தது இதில் வீடு தரைமட்டம் 3 பேர் உயிரிழந்தனர் இந்த வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.
சாகர்பாரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட போயர்தாலா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சகிருல் சர்க்கார் (32), மாமன் மொல்லா (30), முஸ்தாகின் ஷேக் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாகவும், அவர்கள் தப்பிச் சென்றதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நடந்தபோது மாமுன் மொல்லா என்ற நபர் வீட்டில் கச்சா வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்தார். வெடிவிபத்தில் வீட்டின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெடிப்பைச் சுற்றியுள்ள சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய காவல்துறை அதிகாரிகள் தற்போது பணியாற்றி வருகின்றனர், வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்ததால் மரணம் ஏற்பட்டதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மாமுன் மொல்லா என்ற நபர் தேசி வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. வெடிகுண்டு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வருவதற்குள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
வெடிவிபத்தின் தீவிரத்தால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வெடிச்சத்தம் காரணமாக அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. வெடிகுண்டு தயாரிப்பின் போது தவறு நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்
கச்சா குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், சம்பவம் குறித்த சரியான தகவல்களை கண்டறிய அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version