Home மாவட்டங்கள் பெங்களூர் இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்பாலம் 65 கிமீ

இந்தியாவிலேயே மிகப்பெரிய கடல்பாலம் 65 கிமீ

சென்னை: ஜூன் 23-
சென்னை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், எண்ணூரில் இருந்து பூஞ்சேரி வரை 65 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலுக்கு மேலே பாலம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டமன்றத்தில் ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதற்கான டெண்டர் பணிகள் விரைவில் நடக்க உள்ளன. கடல் வழிப் பாலம் திட்டம் இந்தத் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ஒருவேளை இந்தத் திட்டம் ஒப்புதல் பெற்று கட்டப்பட்டால், இது இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக இருக்கும். தற்போது 21.8 கிலோமீட்டர் நீளமுள்ள மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் பாலமே இந்தியாவின் நீளமான கடல் பாலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.