Home செய்திகள் தேசிய செய்திகள் உத்தர பிரதேசம், மும்பையில் அமலாக்கத் துறை சோதனை

உத்தர பிரதேசம், மும்பையில் அமலாக்கத் துறை சோதனை

லக்னோ: ஜூலை 18 –
சட்​ட​விரோத மதமாற்​றத்​தில் நடை​பெறும் நிதி​ முறை​கேடு தொடர்​பாக உத்தர பிரதேசம், மும்​பை​யில் 14 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது. உத்தர பிரதேசம் பல்​ராம்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கரி​முல்லா ஷா. இவர் ஜலாலுதீன் என்கிற சங்​கூர் பாபா என அழைக்​கப்​படு​கிறார்.
இவரது தலை​மையி​லான குழு​வினர் பல்​ராம்​பூரில் உள்ள சந்த் அவுலியா தர்​காவை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படுகின்றனர். இவர்​கள் மிகப் பெரிய கூட்​டங்​களை அடிக்​கடி கூட்டி சட்​ட​விரோத மதமாற்ற பணி​களில் ஈடு​படு​கின்​றனர். இந்த கூட்டத்​தில் இந்​தி​யர்​கள் மற்​றும் வெளி​நாட்​டினர் பங்​கேற்​கின்​றனர்.
இந்​தப் பணி​களுக்​காக சங்​கூர் பாபாவுக்​கு, மத்​திய கிழக்கு நாடு​களில் இருந்து ஏராள​மான அளவில் நன்​கொடை வரு​கிறது. ஜலாலுதீன் மற்​றும் அவர்​களின் கூட்​டாளி​கள் பெயரில் உள்ள 40 வங்கி கணக்​கு​களில் ரூ.106 கோடி பணம் உள்​ளது.
இந்த கும்​பல் சட்​ட​விரோத நடவடிக்​கை​களி​லும் ஈடு​பட்​ட​தால், ஜலாலுதீன், அவரது மகன் மெகபூப், கூட்​டாளி​கள் நவீன் என்ற ஜமாலுதீன், நீத்து என்ற நஷ்ரீன் ஆகியோரை உ.பி. தீவிர​வாத தடுப்பு பிரி​வினர் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.
இந்​நிலை​யில் நிதி​ மோசடி குற்​றச்​சாட்​டின் கீழ் இவர்​கள் மீது வழக்​குப்​ப​திவு செய்த அமலாக்​கத்​துறையினர் உ.பி.யில் 12, மும்​பையில் 2 இடங்​களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனை நடத்​தினர். இவர்​களுக்கு மத்​திய ரிசர்வ் போலீ​ஸார் பாது​காப்​பு அளித்தனர்​.

Exit mobile version